Posts

Showing posts from November, 2021

Introduction of Rubber (ரப்பர் வந்தது எப்படி)

Image
    ரப்பர் வந்தது எப்படி??? பென்சிலால் தவறாக எழுதிவிட்டால் , இன்று நாம் சுலபமாக பயன்படுத்தக்கூடிய ரப்பர் கண்டுபிடிப்புக்கு பின்னால் பெரிய கதையே இருக்கிறது . இன்று நாம் பயன்படுத்தும் ஏரேசர் எனப்படும் ரப்பர் , செயற்கை ரப்பரில் இருந்து செய்யப்படுகின்றன . சரி , ரப்பர் மட்டும் பென்சில் கறையை எப்படி நீக்குகிறது ? என ஆராயலாம் . ரப்பர் காகிதத்தைவிட அதிக ஒட்டும்தன்மை கொண்டது . அதனால்தான் காகிதத்தில் ரப்பரை வைத்து தேய்க்கும்போது காகிதத்தில் ஒட்டியிருக்கும் கிராபைட் ( பென்சில்முனை கிராபைட்டால்தான் செய்யப்படுகிறது ), ரப்பரில் ஒட்டிக்கொள்கிறது . அதனால் அந்த இடத்தில் எழுத்து அழிந்து , சுத்தமாகிவிடுகிறது . இப்போது நாம் பயன்படுத்தும் ரப்பர்கள் கண்டுபிடிப்பதற்கு முன் காகிதத்தில் பென்சில் அல்லது மரக்கரியால் எழுதியதை அழிக்க மெழுகு போன்ற ஒரு பொருளை பயன்படுத்தினார்கள் . பர்ச்மெண்ட் , பாப்பிரஸ் தாள்களில் மை பேனாவால் எழுதியதை மணல் கற்கள் , பியூமிஸ் போன்ற மாவுக்கற்களை வைத்து தேய்த்து அளித்துள்ளார்கள் . பிரெட் துண்டுகளைக்கூட ரப்ப...

வாடன் சம்பா (Vadan Samba Rice)

Image
குழந்தைகளுக்கு ஊட்டும் முதல் சோறு மானாவாரி மற்றும் வறட்சியான பகுதிகளில் பரவலாக   சாகுபடி செய்யப்படும் நெல்ரகம் , வாடன் சம்பா . வறட்சியை   தாங்கிக்கொண்டு , மழை பெய்யும்போது உள்வாங்கி வளர்ச்சி அடையும் தன்மை கொண்டது . 140 நாள் சாகுபடி காலம் கொண்டது . இந்த நெல் ரகம் . மஞ்சள் மற்றும்   பழுப்பு நிற அரிசியை கொண்ட நீண்ட கால பயிர் ஆகும் . 4 அடி உயரம் வரை வளரக்கூடியது . ஒருமுறை மூலிகை பூச்சி விரட்டியும் , ஒருமுறை பஞ்சகவ்யாவும் பயன்படுத்தினால் ஏக்கருக்கு 25 மூடை வரை மகசூல் கிடைக்கும் . இந்த ரகத்தின் விற்பனைக்கு நல்ல வரவேற்பு உண்டு . இந்த ரகத்துக்கு ரசாயன உரங்களோ , பூச்சிக்கொல்லிகளோ தேவையில்லை . இயற்கையாகவே நோய் எதிர்ப்புசக்தி கொண்ட ரகம் இது .  மணிகள் கொட்டும் தன்மை கொண்டவை என்பதால் , 10 நாட்களுக்கு முன்பாக அறுவடை செய்ய வேண்டும் . சன்ன ரகமாகவும் , சத்து மிகுந்த ரகமாகவும் இருப்பதால் உணவு மற்றும் பலகார வகைகளுக்கு அதிகம் விரும்பப்படுகிறது . உணவு திருவிழாக்களில் பங்கேற்க வாடன் சம்பா அரிசியில் பலகா...

கார் துருப்பிடிக்காமல் இருப்பதற்கு (Car Rusting Solution)

Image
கார் துருப்பிடிக்காமல் இருப்பதற்கு  காரில் துருபிடிக்க முதல் காரணம் உப்பு தண்ணீர் தான் . சில இடங்களில் காரை கழுவ உப்பு தண்ணீர் மட்டுமே உபயோகிக்கும் பட்சத்தில் கழுவியதும் துணியால் சுத்தமாக துடைத்து எடுத்து விட வேண்டும் . உப்பு தண்ணீர் தேங்கிய இடத்தில் உடனடியாக துருப்பிடிக்க ஆரம்பித்து விடும் . உப்பு தண்ணீரில் அடிக்கடி கார் கழுவுவதை தவிர்த்து நல்ல தண்ணீரில் வெறுமனே துடைத்து வந்தால் கூட போதும் . சக்கரம் அமைந்துள்ள உள்பகுதி மற்றும் உள்பகுதியில் மேட்பிளாப் உள்ள இடங்களில் அதிகமாக மண் மற்றும் சேறு போன்றவை தங்கிவிட வாய்ப்புகள் உள்ளன . மண் மற்றும் சேறு தொடர்ந்து தங்கும் பட்சத்தில் அங்கு துருப்பிடிக்க தொடங்கி விடும் . ஆகவே இப்பகுதியில் மண் மற்றும் சேறு தங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் . என்ஜின்களில் கவுல் பேனல் , பேட்டரி டிரே மற்றும் ஸ்டிரட் மவுட்டிங் உள்ள இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்புகள் அதிகம் . விரைவாக துருபிடிக்கும் இடங்களில் இதுவும் ஒன்று . ஆகவே இந்த இடங்களில் தண்ணீர் தேங்காமல் ...

வாரிசு சான்றிதழ் (Legal Heir Certificate)

வாரிசு சான்றிதழ்  வங்கி அல்லது நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த ஒருவர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டால் , அந்த சொத்தை வாரிசுகள் பெற வேண்டும் . இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இவருக்கு இவர்தான் வாரிசு என்கிற வாய்மொழி உறுதியின் மூலமோ அல்லது வழக்கமான குடும்ப ஆவணங்களில் மூலமோ மட்டும் உறுதிப்படுத்த முடியாது . சட்டபூர்வமான வாரிசு சான்றிதழ் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தேவைப்படுகிறது . நேரடியாக இன்னாருக்கு இவர்தான் வாரிசு என்று குடும்ப ஆவணங்கள் சொன்னாலும் , சில சிக்கலான நிலைமைகளில் சொத்துகளை அல்லது உரிமையை அனுபவிப்பதற்கு இந்த சான்றிதழ் தேவைப்படுகிறது . இந்த வாரிசு சான்றிதழை தாசில்தார் மூலமாக வாங்க வேண்டும் . வாரிசு சான்றிதழ் கோருபவருக்கு உள்ள உறவு நிலை , குடும்ப உறுப்பினர்கள் , சட்ட சிக்கல்கள் போன்றவற்றை ஆராய்ந்து இந்த சான்றிதழை அவர் வழங்குவார் . ஆனால் வாரிசு சான்றிதழ் வாங்குவதற்கு நீதிமன்றம் வரை செல்வதற்கான காரணங்களும் உள்ளன .  எந்தெந்த சூழ்நிலைகளிலும் நீதிமன்றம் மூலம் வாரிசு சான்றிதழ் தேவையாக இருக்கிறது ...