Posts

Showing posts from October, 2021

Property (ஏலம் விடப்படும் சொத்து)

Image
ஏலம் விடப்படும் சொத்து விவசாய கடன் , கல்விக்கடன் , தொழில் முனைவோர் கடன் , வீடு கட்ட கடன் என மக்களின் பல தேவைகளை முன்னிட்டு வங்கிகள் கடன் தருகின்றன . அந்த வகையில் அடமான கடனும் ஒன்று . பெரும்பாலும் பல்வேறு தேவைகளை முன்னிட்டு இந்த கடனை வங்கி வாடிக்கையாளர்கள் வாங்குகிறார்கள் . நிலத்தின் பெயரிலோ , நிறுவனம் அல்லது வீட்டின் பெயரிலோ இந்த கடன்கள் வாங்கப்படும் . இம்மாதிரியான கடன்களுக்கு ஒழுங்காக தவணை கட்ட முடியாது போனால் உரிய காலக்கெடுவுக்கு பிறகு வங்கிகள் அந்த சொத்தை கையகப்படுத்தும் . இந்த மாதிரி கையகப்படுத்தும் சொத்துகள் முறையான சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு ஏலத்துக்கு விடப்படும் . ஏலத்துக்கு வரும் வீடுகள் , நிலம் , நிறுவனங்களை ஏல முறையில் வங்கிகள் விற்பனை செய்து , தங்களுக்கு சேர வேண்டிய தொகைக்கு எடுத்து கொள்ளும் . இது மட்டுமல்லாது வீடு கட்ட கடன் வாங்குபவர்களுக்கு மாத , தவணை கட்ட தவரும்போதும் , உரிய காலக்கெடுவுக்கு பிறகு வீடுகளை வங்கிகள் கையகப்படுத்தும் . இது பொதுவான நடைமுறை . பொதுவாகவே சொத்தை ஜப்தி செய்த ...

Jute Manufacturing (சணல் உற்பத்தி)

Image
சணல் உற்பத்தி பண்டைய காலத்தில் இருந்தே நமது நாட்டில் அதிகமாக பயிரிடப்பட்டு வருவது , சணல் . பாலித்தீன் மற்றும் செயற்கை இழைகள் அதிகம் வர தொடங்கிய போது சணல் உற்பத்தி கடுமையான வீழ்ச்சியை கண்டது . ஆனால் நாளடைவில் இயற்கை இழைகளின் தேவை அதிகரித்த போது சணலின் சந்தை விரிவடைந்தது . சணல் உற்பத்தியும் வளர்ச்சி பெற்றது . பருத்தி , கரும்பு , வாழை போன்றே சணலும் பணப்பயிர்களும் ஒன்று . அதன் பயன்களும் அதிகம் . இந்தியாவுடன் பல நாடுகள் வர்த்தக தொடர்பு வைத்திருந்ததற்கு சணலும் ஒரு காரணம் . பொதுவாக இரண்டு வகையான சணல் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன . வெள்ளை சணல் , கோர்க்குரஸ் டோசா சணல் . வெள்ளை சணல்தான் இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது . முக்கியமாக மேற்கு வங்காளத்தில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது . வெள்ளை சணல் அதிக உறுதி தன்மை கொண்டது . தற்போது வேதியல் பொருட்களை கொண்டு அதிகமாக விளம்பர பேனர்கள் தயாரிக்கப்படுகின்றன . இது மக்குவதற்கு நீண்ட காலம் எடுத்து கொள்ளும் . ஆனால் தற்போது சுற்றுசூழல் ஆர்வலர்கள் சணலினால் ஆன...

Spread of CANCER VIRUS

Image
தொற்று மூலம் பரவும் புற்றுநோய்   டைபாய்டு , மலேரியா போன்றவை தொற்று நோய்கள் தான் . இது உண்மை . ஆனால் இவற்றால் புற்றுநோய் ஏற்படுவதில்லை . அதே நேரம் சில நோய்கள் புற்றுநோயை ஏற்படுத்த கூடியவை . ஹெலிகோப்பாக்டர் பைலோரி எனும் கிருமி காரணமாக இரைப்பை புண் ஏற்படுவதுதான் , தற்காலத்தில் அதிகம் . அசுத்தமான குடிநீரில் இவை வசிக்கும் . அதனை அருந்துபவர்களுக்கு இந்த பாக்டீரியா தொற்றிக்கொள்ளும் . இது பல வருடங்களுக்கு இரைப்பையில் வாழும் . இதற்கு சிகிச்சை எடுக்க தவறினால் , நாளடைவில் இது இரைப்பை புற்றுநோயை தூண்டும் . மற்றவர்களை விட இந்த கிருமி தொற்று இருப்பவர்களுக்கு இரைப்பையில் புற்று நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் . அடிக்கடி இரைப்பை புண் தொல்லை கொடுத்தால் ஒரு முறை எண்டோஸ்க்கோப்பி பரிசோதனை செய்து   ஹெலிகோப்பாக்டர்   பைலோரி கிருமி இருக்கிறதா என்பதை உறுதி செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அலட்சியமாக இருந்து விட கூடாது. ஹெபடைடிஸ் - பி மற்றும் சி வைரஸ்கள் கல்லீரலை தாக்கும் போது முதலில் மஞ்சள் காமாலை ஏற்படும் . இந்த நோய...

Lice Types (பேன்கள் வகைகள் )

Image
  பேன்கள் வகைகள்  தலை , முதுகு மற்றும் கழுத்து மீது ஊர்ந்து , நமது ரத்தத்தை பேன்கள் உறிஞ்சிவிடுகின்றன . பேன்கள் முட்டைகள் நிட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன . இது முடியுடன் ஒட்டிக்கொள்கிறது . மேலும் இது அரிப்பை ஏற்படுத்துகிறது . ஒருவரின் தலை தொடர்பில் இருந்து மற்றொருவருக்கு பேன்கள் உருவாகின்றன .  பேனால் குதிக்கவோ அல்லது பறக்கவோ முடியாது . ஆனால் முடியின் வழியாக பேன் மற்றொருவருக்கு பரவுகிறது . பேன்கள் கருப்பு , பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் . தலையில் பேன் இருப்பது என்பது கெட்ட மற்றும் சுகாதார இன்மை பிரச்னை அல்ல . பேன் நமது உச்சந்தலையில் எரிச்சலும் , நமைச்சலும் ஏற்படுத்துகிறது . பேன் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒருவர் தலையை அடிக்கடி சொறிந்து கொண்டிருப்பார் . பேன் இரவில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் . மேலும் இரவுநேரங்களில் தூக்கமின்மைக்கு பேன்கள் கூட ஒரு காரணமாக இருக்க முடியும் . தலையில் இருந்து கழுத்து , காதுகள் மற்றும் சில நேரங்களில் மார்பிலும் பேன்கள் காணப்படுகின்றன . இவற்றில் ...

Fish Department (மீன்வளத்துறை)

Image
மீன்வளத்துறை தமிழ்நாட்டின் மீன்வளத்துறை 1905- ஆம்   ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது .  தமிழக மீனவர்களின் மீன்பிடி முறை மிக பழமையானதாக உள்ளதாக கூறிய ஆங்கிலேய அரசு , அதை மேம்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் புதிய மீன்பிடி முறைகளை , அதாவது மிதவெட்ப மண்டலத்தில் பயன்படுத்தும் மீன்பிடி முறைகளை ஆராய தொடங்கியது . இழுவை மடிகள் பொருந்திய விசைப்படகு வைத்து அதிகம் மீன் புழங்கும் இடங்களை கண்டறிந்தது . ஆரம்பகட்ட பரிசோதனைகளை வைத்து அப்போதைய ஆங்கிலேய அரசு , இந்தியா இழுவை மடிகள் பயன்படுத்த ஒரு தகுந்த இடமாக இருக்கும் என முடிவு செய்தது . இழுவை மடிகள் பொருந்திய விசைப்படகை பயன்படுத்துவதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்ந்தது . நாட்டு விடுதலைக்கு பின் இந்திய அரசின் முதல் திட்டக்குழுவின் நோக்கம் மீன்வளத்தை அதிகரிப்பது , மீன் வள மக்களை ஏழ்மையில் இருந்து வெளியே கொண்டுவருவதுதான் . மீன்வளத்துறையில் இப்போது சவால்கள் அதிகம் உள்ளன . மீன்பிடித்தலை முறைப்படுத்த முதலில் மீன் உயிரியலை பற்றி அறிய வேண்...