நவீன கட்டிடக்கலையின் சிற்பி
ஆஸ்கர் நிமாயார் என்பவர் நவீன கட்டிட கலையில் சிற்பி என அத்துறை வல்லுனர்களால் அழைக்கப்படுகிறார்.
பிரேசிலில் ரியோ டி ஜெனிரோ நகரத்தில் 1907-ம் ஆண்டு டிசம்பர் 15-ல் பிறந்தவர். அங்கு 1934-ம் ஆண்டு கட்டிடவியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.
பாம்புல்கா வளாகத்தை 1941-ல் கட்டியதுதான் இவரது முதல் பணி. மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தில் பிறந்த நிமாயார் சிறுவயதில் எவ்விதமான இலக்கும் இன்றி வளர்ந்தார். ஆனால் இவருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. பிஞ்சு கைகள் கொண்டு வானத்தையும் மலைகளையும் ஓவியமாக உருவாக்கினார். இந்த தாக்கம் தான் அவர் பின்னாளில் மிகப்பெரிய கட்டிடவியல் துறை ஆளுமையாக உருவாக காரணமாக இருந்தது.
அப்போது பிரேசில் அதிபராக இருந்த ஜீசிலினோ குபிசேக்கி, நிமாயாரின் நெருக்கமான நண்பராக இருந்தார். அதன் அடிப்படையில் பிரேசிலுக்கான புதிய தலைநகரை உருவாக்கி தரும்படி கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி பிரேசிலின் புதிய தலைநகரான பிரேலில்லாவின் பொது கட்டிடங்களை நிமாயார் உருவாக்கினார்.
நிமாயார் கம்யூனிச சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். அதன் அடிப்படையில் பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சியில் 1945-ல் உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார்.
கட்டிடவியல் குறித்த கருத்துக்கூறும்போது கட்டிட கலைஞர் வெறும் கட்டிடவியலை குறித்து மட்டும் சிந்திக்கக்கூடாது. கட்டிடவியலால் உலகத்தின் பிரச்சனைகளை எப்படி தீர்க்க முடியும் என சிந்திக்க வேண்டும். கட்டிடங்கள் மூலம் சிறந்த உலகை உருவாக்க வேண்டும். சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான மட்டும் கட்டிட கலைஞர்கள் செயல்பட கூடாது. அனைத்து தரப்பினருக்குமான கட்டிடங்களை உருவாக்க வேண்டும் என்றார், நிமாயார்.
1964-ல் பிரேசிலில் ராணுவ ஆட்சி உருவானதும், கம்யூனிஸ்ட்டான நிமாயார் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தனது அலுவலகத்தை தொடங்கி வட ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பல கட்டிடங்களை உருவாக்கினார். 1988-ம் ஆண்டு கட்டிடவியல் துறையின் மிக உயரிய விருதான பிரிட்ஸ்கெர் விருது இவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
103 வயது வரை தினமும் தன் அலுவலகம் வந்து கட்டிடங்களுக்கான வரைபடங்களை பார்க்கும் வழக்கத்தை கடைபிடித்து வந்தார். தான் பிறந்த ரியோ டி ஜெனிரோவிலேயே
நிமாயார் மரணம் அடைந்தார்.
Comments
Post a Comment